ஞாயிறு, 26 ஜூலை, 2020

எல்லோரா. பகுதி 4. கொசாகா ஏன் மேலிருந்து கீழே குடைந்தான்?

எல்லோரா. பகுதி 4. கொசாகா ஏன் மேலிருந்து கீழே குடைந்தான்?
எல்லோரும் கட்டிடம் அல்லது கோயில் கட்டினால் கீழே அஸ்திவாரத்திலிருந்து தானே ஆரம்பிப்பார்கள்?

கோயிலைப் பாருங்க.  இவ்வளவு பெரிய கோயிலை கீழிருந்து மேலே கட்டுவதற்கு எவ்வளவு வருஷங்கள் ஆகும்? யோசித்துப் பாருங்க. _எப்ப கோயிலை முடிக்கிறது, எப்ப அரசியார் தன்னுடைய உண்ணாநோன்பினை முடிப்பது? அதனால் தான் புத்திசாலித்தனமாக கொசாகா முடிவெடுத்தான், மேலிருந்து கீழே குடைவோம் என்று!!!
முன்னால சொன்ன மாதிரி ஒரு வாரத்துல கோபுரம் மட்டுந்தான் எழுப்பினாங்க. படத்துல இருக்கிற மாதிரி கட்ட பல வருஷங்கள் ஆனது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. கொசாகாவின் வழித் தோன்றல்கள், வெவ்வேறு அரசர்கள் முதலில் போடப்பட்ட பிளான்ல இம்மி கூட மாறாம கட்டினாங்க என்று தெரிகிறது.
அதப் பத்தி விவரமா அடுத்து வரும் பகுதிகளில் பாப்போம்.

திங்கள், 20 ஜூலை, 2020

எல்லோரா. பகுதி 3. கொசாகா என்ன செய்தான்?

எல்லோரா. பகுதி 3. கொசாகா என்ன செய்தான்?
கொசாகா மிகச் சிறந்த கட்டிடக்கலை வல்லுனர். அவரிடம் மிக அதிகமான கட்டிடக்கலை நிபுணர்கள் வேலையில் இருந்தார்கள்.
தான் செய்யப் போகும் வேலையை மன்னரிடம் எடுத்துரைக்கிறார்.
“மன்னரே, நான் அரசிக்காக கட்டப்போகும் கோயில் எல்லோரும் கட்டுவது போல கீழிருந்து அல்ல. .இதற்கென ஒரு மலையை தேர்ந்தெடுத்துள்ளேன். அதனை மேலிருந்து உளி போன்றவற்றைக் கொண்டு தேவையில்லாத கற்களை எடுத்து விட்டு, முதலில் கோபுரம், பின்னர் ஒவ்வொன்றாக உருவாக்கப் போகிறேன். இதில் எந்த இடத்திலும் வேறே பொருட்கள் பயன்படுத்தப் படமாட்டாது. கோபுரம் ஒரே வாரத்தில் அரசிக்காக உண்டாக்கிவிடுவேன். அரசியும் தன்னுடைய உண்ணா நோன்பினை முடித்துக்கொள்ளலாம்.” ஆச்சர்யத்தில் முழுகினான் அரசன்.
சொன்னபடி வேலையைத் துவக்கினான் கொசாகா.
எல்லோரையும் போல கோயில் கீழிருந்து மேலே கட்டாமல், மேலிருந்து கீழே செல்ல ஏதுவாக சிறந்த மலையைத் தேர்ந்தெடுத்தான் கொசாகா. தேவையில்லாத கற்களை உளி கொண்டு நீக்கினான். சிறிதுசிறிதாக கோபுரம் உருவாகியது. சொன்னபடி ஒரே வாரத்தில் கோபுரம் உருவாகி, அரசியார் பார்த்தார். அசந்து போனார். கோபுரமே இப்படி உருவானால் கோயில் எப்படி உருவாகும்!!!! 
“மணீகேஷ்வர்,” ஆம் அது தான் அந்த கோயிலுக்கு பெயர். அது தான் அரசியாரின் பெயரும் கூட. சிவனின் கோபுரத்தைக் கண்ட அரசியாரும் தன்னுடைய உண்ணா நோன்பினை முடித்துக் கொண்டார்.
இப்படியாக ஆரம்பிக்கப்பட்டது  தான் தற்போது மஹாராஷ்டிராவில் அஹமதாபாத் அருகில் உள்ள எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில்!!!!!!! அதனைப் பார்த்த பிறகு சொல்லுங்க தாஜ்மஹால விட இது பன் மடங்கு பெரிசு தானே!!!!!!

சனி, 18 ஜூலை, 2020

எல்லோரா பகுதி 2. ராணி என்ன செய்தார்?

எல்லோரா பகுதி 2. ராணி என்ன செய்தார்?
சென்ற பகுதியில் ராஷ்டிரகூட மன்னரின் மனைவி தன் கணவன் உடல்நலம் தேற சிவனை வேண்டினார் என்று பார்த்தோம்.
“சிவனே, என் கணவன் உடல் தேறினால் உனக்கு கோயில் கட்டுகிறேன். அது வரைக்கும் ஆகாரம் உட்கொள்ள மாட்டேன்” என்று வேண்டிக்கொண்டார்.
என்னவாயிற்று? 
கடவுளை நம்பினார் கைவிடப்படார்.
ஆம், சிவனும் கைவிடவில்லை.
கணவன் உடல் நலம் சிறிது சிறிதாக தேறினார்..
 கணவனிடம் விஷயத்தைக் கூறி கோயில் கட்ட ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்.
கணவனிடம் ஒரு நிபந்தனை விதித்தார். 
“கோயில் கட்டி முடியும் ஆகாரம் உட்கொள்ள மாட்டேன்.”
மன்னரும் தான் ஆட்சி செய்யும் எல்லா இடங்களில் இருந்தும் நன்றாக கோயில் கட்டத் தெரிந்த கட்டிட வல்லுனர்களை வரவழைத்து மஹாரானியின் நிபந்தனையைக் கூறினார். எல்லோரும் ஏகமனதாக , 
“அரசே நீங்கள் வைத்துள்ள நிபந்தனை கடுமையானது. கோயிலைக் கட்ட நீண்ட வருஷங்கள் ஆகும். அதுவரை மஹாராணி உபவாசம் இருக்க முடியாது. எங்களால் கோயிலை எழுப்பமுடியாது” என்று கைவிரித்து விட்டனர்.
கடைசியாக” கொகாசா” என்ற மிகச் சிறந்த கட்டிட வல்லுனர்
 “ஒரு யோசனை சொல்லுகிறேன். அதன் படி என்னிடம் உள்ள வல்லுனர்களைக் கொண்டு ஒரு வாரத்தில் கோபுரத்தை எழுப்பி விடுகிறேன். எந்த கோயிலுக்கும் கோபுரம் தான் முக்கியம். கோபுரத்தைப் பார்த்தாலே கோயிலைப் பார்த்த மாதிரி தான். அதன் மூலம் அரசியின் நிபந்தனை பூர்த்தியானதாகும். இதற்கு தாங்கள் சம்மதித்தால் இப்போதே வேலையைத் துவக்குகிறேன். ஒரு வாரத்துக்குள் கோபுரம் வந்துவிட நான் உறுதியளிக்கிறேன்” என்று மன்னரிடம் கூறினான்.
அரசருக்கோ சந்தேகம்!!!!!
“எல்லோரும் கட்டிடத்தை கீழிருந்து ஆரம்பித்துத் தானே மேலே போவார்கள்.  அப்படி இருக்கும் போது இவர் எப்படி  ஒரு வாரத்துக்குள் கோபுரத்தை எழுப்புவார்”.
சந்தேகத்தை எப்படி 'கொசாகா', நிவர்த்தி செய்தான்?

வியாழன், 9 ஜூலை, 2020

கைலாசா பகுதி 1

எல்லோரா பகுதி 1
கணவனுக்கு மனைவி கட்டிய தாஜ்மஹால் (கோயில்).!!!!!
உலக அதிசயங்களில் தாஜ்மஹாலைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை. ஆனால் இங்கயே இந்தியாவில், கணவனுக்கு மனைவி கட்டிய தாஜ்மஹாலை விட சிறந்த கட்டிடம், ஏன் கோயில் என்றே கூறலாம், ஒன்று எத்தனை பேருக்கு தெரிஞ்சு இருக்கும்!!!
தாஜ்மஹால் ஒன்றும் காதல் ஓவியமாக இருக்க முடியாது!!! ஏன் தெரியுமா?
அவன் ஒண்ணும் காதல் மன்னன் அல்ல. அதே போல மும்தாஜ்பேகம் ஒன்றும் ஷாஜஹானின் முதல் மனைவியல்ல. மும்தாஜும் முன்னரே மணம் ஆனவள் தான். இது இரண்டாம் கல்யாணம். பத்து பிள்ளைகளை பெற்று, பதினொன்றாவது பிரசவத்தில் மரித்துப் போனவருக்குத் தான் தாஜ்மஹால் கட்டினாராம் ஷாஜஹான். அதைவிட அந்த இடத்தில் ஏற்கனவே இந்து கோவில் இருந்தது என்று சொல்பவர்கள் நிறையப் பேர் உண்டு!!!!!
இப்படி எல்லாவற்றிலும் முரண். அதனைப் பார்க்கும் போது கணவனுக்கு கோயில் கட்டினதைப் பார்த்தால் தாஜ்மஹால் ஒன்றும் பெரியதில்லை.
யார்ய்யா அது?
ஆம், காதல் கணவனுக்கு கட்டியது தான் கைலாசா கோவில்.
சரித்திரத்தை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.
7ம் நூற்றாண்டு. ராஷ்ட்ரகூட மன்னர்கள் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த நேரம். மன்னர்களின் வரிசையில் கிருஷ்ணா I என்ற பெயரில் அரியணையில் இருந்தார். அரசருக்கு உடல்நலம் சரியில்லை. அவரின் மனைவி,, பொறுப்பேற்றுக் கொண்டு நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் மிகச் சிறந்த வைத்தியர்களை வரவழைத்து, மன்னரின்  உடல்நலம் தொடர்ந்து முன்னேராரது குறித்து ஆலோசனைகள் செய்தார். வெவ்வேறு மருந்துகள் கொடுத்தும் மன்னரின் உடல்நலமாகவில்லை.
திக்கற்றவர்களுக்கு கடவுள் தான் துணை என்பது போல், அரசியார் கிரிஷ்னேஸ்வரில் உள்ள சிவனை (எலப்புரா, தற்போதைய எல்லோரா) வேண்டினார்.
என்ன வென்று கேளுங்க?

ஞாயிறு, 3 மே, 2020

பயணக் கட்டுரை கோலாப்பூர் பகுதி 10

அடுத்து எங்கள புதிய அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். 
கோலாப்பூர் மக்கள் அந்த ஊர் மஹாராஜாவுக்கு நல்ல மரியாதை செய்கிறார்கள்.பழைய அரண்மனை ஸீ மஹாலக்ஷ்மி கோயில் அருகாமையில் உள்ளது. பேருக்குத் தான் புதிய அரண்மனை. ரொம்ப பழைமையாகத்தான் உள்ளது. உள்ளே செல்ல கட்டணம் உண்டு. அரச வம்சத்தினர் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளார்கள் வேகமாக பார்த்துவிடலாம். சாஹு மஹராஜ் அரண்மனை என்று பெயர்.
இதற்குள் பகல் 2 மணியாகிவிட்டது. நண்பரை எங்காவது ஹோட்டல் இருந்தால் நிறுத்துங்கள் என்று சொன்னோம். கவலைப் படாமல் அந்த ஊர நடிகரின் வீடு, பிள்ளையார் கோவில், 
யாரோ சாமியார் ஆஸ்ரமம் இப்படி பசி நேரத்தில் காண்பித்ததை எல்லாமே பார்க்க இஷ்டப்படாமல் பார்த்தோம். மதியம் 3 மணியளவில் எங்களை லாட்ஜில் கொண்டுவிட்டார். அப்பாடா என்று இருந்தது. பேசியபடி எல்லாவற்றையும் காண்பிக்க முடியவில்லை. எச்சரிக்கை கோலாப்பூர் போகும் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர் வசம் கவனமாக இருக்கவும்.
சிறிது நேரம் ஓய்வுக்கு பின் மீண்டும் ஸீ மஹாலக்ஷ்மியை தரிசிக்கக் கிளம்பினோம். முன் சொன்னபடி நடந்தே கோவிலுக்கு வந்நோம். நல்ல தரிசனம். கோவில் மாலை நேரத்தில் ஜொலித்தது. வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் கோபுரம், தீபம் ஏற்றும் ஸ்தம்பம் ஆகியவை ஜொலித்தன.
பவானி மண்டபம் ஸீமஹாலக்ஷ்மி கோவிலுக்கு அருகிலேயே உள்ளது. இது பழைய அரண்மனை ஆகும். சாஹு மகராஜ் அவர்களின் ஆளுயுர சிலை வைத்துள்ளார்கள் அவர் வேட்டையாடிய பொருட்களை காட்சியாக வைத்துள்ளார்கள். சாஹு மஹராஜ் வழிபட்ட பவானி விக்ரஹம் உள்ளது. நல்ல விஸ்தாரமான இடம். அந்த இரவு நேரத்தில் ஸீமஹாலக்ஷ்மி கோவில் கோபுரங்கள் பல வண்ண விளக்குகளால் மின்னுகிறது. பார்க்க ரம்மியமாக காட்சியளிக்கிறது.
அந்த ஊரின் விஷேஷம் என்ன என்று விஜாரித்ததில் செருப்பு முக்கியமா சொல்றாங்க. எத்தனை தேய்த்தாலும் கரையாது. வளையல்கள் பார்க்க ஆசையைத் தூண்டுகிறது  நாங்க பாக்காம விட்டது , கோலாப்பூர் மல்யுத்தத்துக்கு புகழ் பெற்றதாம். அதற்கென அரங்கம் எல்லாம் வைத்து வீரர்கள் தயார்படுத்தப்பட்டு ஒலிம்பிக் வரை செல்கிறார்களாம்.
நீங்க அடுத்தமுறை சென்றால் இலைகளை ஞாபகம் வைத்துக்கொண்டு பாருங்க. ரெண்டு நாள் தங்கிப் பாருங்க. கோலாப்பூர் அருகில் பாக்க வேண்டிய இடங்கள் பற்றி கோவிலில் போட்டோ மற்றும் எப்படி செல்வது என்பது பற்றி விளக்கமா வைத்துள்ளார்கள்.  கோவிலுக்கு அருகாமையில் சிவன் கோவில் மார்க்கெட்டுடன் இணைந்து உள்ளது. அதே போல நந்தி உள்ளேயும் சிவலிங்கம் வெளியேயும் என ஒரு கோவில் உள்ளது.
நாங்க ஸீரங்கம். அதனால் அடுத்த நாள் காலை ஒரு தடவை ஸீமஹாலக்ஷ்மியை சேவித்தோம். எங்களுக்கு காலையில் திருப்பதி வழியாக ரமில் காலையில் ஏறினோம் மறுநாள் காலை திருப்பதி வந்தோம். ஒரு மணி நேர இடைவெளியில்  விழுப்புரம் வழியா மறுநாள் இரவு ஸீரங்கம் வந்து சேர்ந்தோம். மறக்க முடியாத அனுபவம். பார்ப்போம் ஸீமஹாலக்ஷ்மி மீண்டும் எப்போது கூப்பிடுகிறார் என்ற எதிர்பார்ப்போடு ,அடுத்த பயணத்தில் எல்லோரா மற்றும் அஜந்தா பற்றி எழுதுகிறேன்.

வெள்ளி, 1 மே, 2020

பயணக் கட்டுரை கோலாப்பூர் பகுதி 9

 ஃபன்ஹாலா கோட்டை, கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எங்க ஆட்டோ ஒட்டுனர்  ஜோதிபா கோயிலில் இருந்து நேராக இந்ந மலைக்கு ஒட்டி வந்தார். ஆம்,  இந்த கோட்டை இன்னொரு மலையில் உள்ளது.
 காலத்தின் கோலத்தில் நிறைய சிதிலமடைந்து உள்ளது.
7 கிலோமீட்டர் சுற்றளவுடன், பெரிய கதவுகளுடன், அங்கங்கே சிப்பாய்கள் தங்க, பெரிய மதிலுடன் தூரத்தில் இருந்து பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. 12ம் நூற்றாண்டில் போஜ ராஜாவால் கட்டப்பட்டு பின்னர் வெவ்வேறு மன்னர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். சிவாஜி கொஞ்ச நாட்கள் இந்த கோட்டையைப் பயன்படுத்தி இருக்கிறார். கோலாப்பூர் மஹாராணி கொஞ்ச நாட்கள் இங்கிருந்து ஆண்டிருக்கிறார்.
இங்க பாக்க வேண்டிய இடங்கள்,  
தீன் தர்வாசா என்று சொல்லப்படும் மூன்று வாசல், கோட்டை எதிரிகளால் வெளியில் சூழப்படும் போது உள்ளேயே மக்கள் உயிர் வாழத் தேவையான ஆகாரங்களைச் சேர்த்து வைப்பதற்கான இடம், நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்களை மேலிருந்து தூக்கி கீழே போடுவதற்கான இடம், அவசரத்திற்கு நாட்டை விட்டு செல்ல நேரிடும்எனில் அதற்கான வழி ஆகியவை ஆகும்.
அவற்றையெல்லாம் ஆட்டோநண்பர் நன்கு காண்பித்தார்.

கோலாப்பூர் செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் பன்ஹாலா கோட்டை

புதன், 29 ஏப்ரல், 2020

பயணக் கட்டுரை கோலாப்பூர் பகுதி 8

நாம இப்ப ஜோதிபா டெம்பிள் போகப் போறோம். அது இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மலை மேல் உள்ளது என அவருக்கு தெரிந்த தமிழில் சொல்ல நாங்க புரிந்து கொண்டோம். மும்மூர்த்திகளுக்குமான இடம் இது.நாங்க போயிருந்த. போது சிலை ரூபத்துக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். நீண்ட நேரம் தரிசனம் செய்த பிறகு அவரைப் படம் பிடித்துக்கொண்டோம். 
ஹோலிக்கு பயன்படுத்தப்படும் குங்குமம் கோவில் முழுவதும்  சிந்தியிருக்கிறது. ராணோஜி ஷிண்டே என்பவர் 1730 ளில் இந்தக் கோவிலை கட்டியிருப்பார் என்கிறார்கள். கோவிலுக்கு செல்லும் இரு பக்கங்களிலும் நிறைய கடைகள் உள்ளன. சித்திரை மாசம் கோவிலில் விஷேஷம் நடைபெறும் என்கிறார்கள்.
அங்கேயே மக்களை கவர பசு ஒன்று பால் தறுவது போல அமைத்துள்ளார்கள்.பாலுக்குப் பதிலாக மடியில் இருந்து தண்ணீர் தான்  வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இருந்து சேவித்தோம். அங்கிருந்து அடுத்து நாங்க சென்ற இடம் பன்ஹாலா ஃபோர்ட் என்ற கோட்டை. அதைப் பற்றி அடுத்து பார்ப்போம்.