புதன், 29 ஏப்ரல், 2020

பயணக் கட்டுரை கோலாப்பூர் பகுதி 8

நாம இப்ப ஜோதிபா டெம்பிள் போகப் போறோம். அது இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மலை மேல் உள்ளது என அவருக்கு தெரிந்த தமிழில் சொல்ல நாங்க புரிந்து கொண்டோம். மும்மூர்த்திகளுக்குமான இடம் இது.நாங்க போயிருந்த. போது சிலை ரூபத்துக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். நீண்ட நேரம் தரிசனம் செய்த பிறகு அவரைப் படம் பிடித்துக்கொண்டோம். 
ஹோலிக்கு பயன்படுத்தப்படும் குங்குமம் கோவில் முழுவதும்  சிந்தியிருக்கிறது. ராணோஜி ஷிண்டே என்பவர் 1730 ளில் இந்தக் கோவிலை கட்டியிருப்பார் என்கிறார்கள். கோவிலுக்கு செல்லும் இரு பக்கங்களிலும் நிறைய கடைகள் உள்ளன. சித்திரை மாசம் கோவிலில் விஷேஷம் நடைபெறும் என்கிறார்கள்.
அங்கேயே மக்களை கவர பசு ஒன்று பால் தறுவது போல அமைத்துள்ளார்கள்.பாலுக்குப் பதிலாக மடியில் இருந்து தண்ணீர் தான்  வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இருந்து சேவித்தோம். அங்கிருந்து அடுத்து நாங்க சென்ற இடம் பன்ஹாலா ஃபோர்ட் என்ற கோட்டை. அதைப் பற்றி அடுத்து பார்ப்போம்.


 

1 கருத்து: